Thursday, September 25, 2014

My Thought - 3

All these management related and the so-called best seller thick books talk in length on how a leader should earn trust within his team to be successful. I would rather say that to lead a successful team, the leader should first learn to trust and respect his team. The team with a leader who does not understand or recognize the strength of his team can never be successful.

My Thought - 2

The man-made money is given more prominence than the God-made man. Does this mean that the man is a better creator than the God?

My Thought - 1

Be it a beggar at the street corner or the CEO of a company...the objective remains the same...make money!

எஸ். ராமகிருஷ்ணனின் "எனது இந்தியா" - My Review

சரித்திரம் என்பது ஆயிரம் முகங்களும் அவற்றுள் ஆயிரம் நாக்குகளும் கொண்டது. ஒவ்வொரு நாக்கு ஒரு மாதிரி பேசும். சில நாக்குகள் உண்மையும், சில நாக்குகள் பொய்யும், பல நாக்குகள் உண்மையும் பொய்யும் கலந்த கலவையும் பேசும். சில மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை சில நாக்குகள் ஏதோ ஓரத்தில் பேசிக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றை கவனிப்பார் மிகவும் குறைவு. சரித்திரத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் புரிய வைப்பதும் சாதாரண காரியம் கிடையாது. 'எனது இந்தியா' என்ற இந்த நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அந்த கடினமான காரியத்தை மிகவும் எளிதாகக் கையாளுகிறார்.

 புத்தகக் கடைக்கோ நூலகத்துக்கோ சென்றால் பல தடி தடியான சரித்திர புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனால் அவை எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. இந்தப் புத்தகமும் சரித்திரப் புத்தகம் தான். இதுவும் தடியான புத்தகம் தான். ஆனால் சரித்திரத்தை சுவைப்பட தெரிவிப்பதில் சரித்திரம் படைத்துள்ளார் இந்த ஆசிரியர்.

 இந்தப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்கள் நாம் வரலாற்றில் கவனிக்காத, மறந்து போன அல்லது சிலரால் மறைக்கப்பட்ட உண்மைகள்.

 எவரெஸ்ட் தெரியும். அது ஒரு ஆங்கில அதிகாரியின் பெயர் என்பதோ அந்த சிகரத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது அதிகார வர்கத்தின் செயல்பாடு என்பதோ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

 இன்றும் கூட ஆங்கிலர் ஆட்சியைப் புகழ்பவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அவர்கள் சாதி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் எப்படியெல்லாம் திட்டமிட்டு நம்மைச் சுரண்டினார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

 திப்புவையும் மருது சகோதரர்களையும் நாம் கொண்டாடி இருக்கிறோம். ஆனால் அவர்களுடைய வாரிசுகளுக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பார்த்ததுண்டா?

 ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்களுக்கு பிணிகளுக்கும் என்ன பின்னணி என்பதை யோசித்திருப்போமா? ஆங்கிலர் ஆள்வதற்கு முன்பாக இந்த அளவு பாதிப்பு நம் நாட்டுக்கு ஏற்பட்டதுண்டா என்பதை ஆராய்ந்திருப்போமா?

 உப்பு சத்தியாகிரகம் மிகவும் பிரசித்தம். ஆனால் உப்பு வேலி? அது வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடுமை.

 ஜஹாங்கீரின் மகள், ஔரங்கசீப்பின் செருப்பு ஊர்வலம், மன்னன் ஜெய்சிங்கின் கொடுங்கோன்மை, முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே ஏற்ப்பட்ட சந்தால் மக்களின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி, யேல் என்ற ஊழல்வாதியின் பெயரால் ஏற்ப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம், பல ஆங்கில அதிகாரிகளின் திருட்டுத்தனம் என கணக்கிலடங்கா வரலாற்று உண்மைகள் - எல்லாம் அநேகமாக நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள்.

 இது அனைவரும் படித்து ஆதரிக்க வேண்டிய புத்தகம்.

"I Too Had A Love Story.." by Ravinder Singh - My Review

With due respect to the author and his own sad real love story, I would like to say that the novel is not very interesting. Poor narrative style, not so interesting plot, lack of twists and very simple language - overall the book is below average. I felt as if I was reading someone's personal diary. It was too monotonous and boring. The story could have been written in much better way; there was scope but the author could not do that somehow.

I am not sure how this book got so many good reviews and became one of the bestsellers.

Haiku - 8

சுவரெங்கும் சித்திரங்கள்
சித்திரங்களில் கடவுளர்
சிறுநீர் கழிக்காதே வாசகம்

சுஜாதாவின் "உங்களில் ஒரு கணேஷ்" - My Review

பல சுஜாதாவுடைய சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகளின் தொகுப்பு. இதில் குறிப்பிடத்தகுந்த கதை 'விஷம்'. இதை சுஜாதாவுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

 போர்வை போர்த்தி தூங்கும் ஒருவன் போர்வைக்குள் ஒரு பாம்பு புகுந்து கொள்வதைப் பார்க்கிறான். எழுந்தால் கடித்துவிடும் என்று பயம். என்ன செய்வது எனத் தெரியாமல் அப்படியே அசையாமல் பல மணி நேரம் கிடக்கிறான். கடைசியில் அவனுடைய நண்பன் அங்கே வருகிறான். சத்தம் போடாமல் அவனுக்கு தன்னுடைய நிலைமையை சொல்வதே இவனுக்கு பெரிய சவாலாக உள்ளது. விளக்கைப் போட முடியாது; போர்வையை வேகமாகவோ மெதுவாகவோ பிரிப்பது ஆபத்து. கோபத்தைக் கூட சன்னமாக வெளிப்படுத்த வேண்டிய நிலை. தும்மவோ இருமவோ கூட முடியாது. இதைப் படிக்கும் நமக்கும் பயமும் விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. கடைசியாக டாக்டர் வருகிறார் - பல முயற்சிகள் செய்கிறார்; முடிவு எதிர் பார்த்ததுதான் என்றாலும் கதை விறுவிறுப்பு குறையாமல் போகிறது.

 பாம்பு கடியை விட பாம்பு கடித்துவிடுமோ என்ற நினைப்பு பயங்கரம். அந்த பயத்தை எழுத்தில் சுஜாதா வெளிப்படுத்துவதைப் போல யாராலும் வெளிப்படுத்த முடியாது.

சுஜாதாவின் "ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் " - My Review

கதை எழுதுவது எப்படி? கவிதை எழுதுவது எப்படி? கடவுளாக அந்தத் திறமையை கொடுத்தால் தான் உண்டு.

 இந்தப் புத்தகத்தைப் படித்தால் ஹைக்கூ கவிதைகள் நன்றாக எல்லாருக்கும் எழுத வரும் என சொல்ல முடியாது. ஆனால் ஹைக்கூவை இதை விட அருமையாக யாராலும் எழுத்து வடிவில் புரிய வைக்க முடியாது.

Haiku - 7

வாசலில் மழை நீர்
 நீரில் அசைவது என்ன
 பாம்பா பயமா

"How I Taught My Grandmother to Read and Other Stories" by Sudha Murthy - My Review

A collection of kind of 'moral stories' based on Sudha Murthy's own experiences.

 I have my respects for Mrs. Sudha Murthy and her social activities. However, I do not find the narrative style of this book interesting or engaging. It's very old fashioned. I neither find them to be of any use for children.

Haiku - 6

ரயிலிலே ஒரு சிறு பெண்
 முகத்தில் லட்சுமி கடாட்சம்
 சில்லறை பணம் கேட்கிறாள்

Haiku - 5

சவரம் மறந்த முகம்
 தூக்கம் இழந்த கண்கள்
 ஐ.டி. கம்பெனியில் வேலை.

Haiku - 4

கோவிலுக்குள்ளும் கூட்டம்
 கோவிலுக்கு வெளியிலும் கூட்டம்
 பணத் தேவை

Haiku - 3

சின்னஞ்சிறு குழந்தை அது
 விழுந்தது மீண்டும் எழுந்தது
 வாழ்க்கைப் பாடம்.

Haiku - 2

வேலை இன்னும் முடியவில்லை
 நள்ளிரவு மணி பன்னிரண்டு
 ஓ இன்று மே தினம்.

ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கரா" - My review

இந்த உலகத்தைச் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். பக்தன் என்பவன் கண்மூடித்தனமாக மதச் சடங்குகளை நம்புபவன் என அறியப்படுகிறான். சதா சர்வ காலம் காரணமின்றி தெய்வ நிந்தனையும் பக்தர்களைக் கிண்டலும் செய்பவன் நாத்திகன் என அறியப் படுகிறான். உழைப்பதற்கு கேள்விகள் கேட்பவன் கம்யூனிஸ்ட் என அறியப் படுகிறான். இப்படி பல சித்தாந்தங்கள் - ஒன்றை ஏற்பவன் அடுத்ததை முற்றிலுமாக நிராகிக்கிறான். இது துரதிர்ஷ்டமான விஷயம் - ஆனால் உலகம் இப்படித் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

 காதல், மோதல், துப்பறிதல் என எத்தனையோ விஷயங்கள் இருக்க இந்த கதை வித்தியாசமான அதே சமயத்தில் சுவையானதொரு களத்தில் பயணிக்கிறது. நாத்திகன், காந்தியவாதி, ஆன்மீகவாதி, சந்நியாசி, தேச பக்தன், கம்யூனிஸ்ட், அரசாங்க ஊழியன் என பல சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களை ஒரே கோணத்தில் ஒரு பொதுவான நன்மைக்காக உடன்பட வைக்கிறது. ஜெயகாந்தனைத் தவிர யாராலும் இப்படி பல்வேறு நம்பிக்கைகளை அதன் சாதக அம்சங்களுடன் சுவையாக அலச முடியாது. 


எமர்ஜென்சி காலத்தில் நடை பெரும் இக்கதை யாரும் எதிர் பாராத கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களையும் நடு நிலையோடு பார்ப்பவர்களால் மட்டுமே இக்கதையை புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடியும்.

 இக்கதை தமிழ் உரை நடையில் ஒரு முத்திரை.

ஜெயகாந்தனின் "ஈஸ்வர அல்லா தேரே நாம்" - My review

இரண்டு வகையான எழுத்தாளர்கள் உண்டு; முதல் சாரார் வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். அடுத்த சாரார் தனக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். ஜெயகாந்தன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றோ பெரும்பாலான வாசகர்களைக் கவர்வதற்கோ எழுதாத கம்பீர எழுத்தாளர். அதனால் தான் அவருடைய எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்டாலும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. இந்த நாவலும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்க நியாயமில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இவருடைய ஆகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

 துப்பறியும் நாயகன், விசேஷ சக்தி படைத்த கதாபாத்திரம் போன்றவர்கள் ஒரே எழுத்தாளனுடைய பல கதைகளில் வருவது உண்டு. ஆனால் இக்கதை நாயகர்களில் ஒருவரான ஆதி காந்தியவாதி - மிகவும் மதிக்கத்தக்கவர். ஜெயகாந்தனின் பிற கதைகளிலும் வந்த கதாபாத்திரம். இதுவே ஒரு வித்தியாசமான முயற்சி என்பேன்.

 காதல் கதை தான் இது - ஆனால் கம்பீரமான விரசமில்லாத காதல். மதச் சண்டை பின்னணியில் எழுதப்பட்ட கதை. சரியாக கையாளா விட்டால் அதுவே பிரச்சனையாகி இருக்கும். இம்மாதிரியான கதைகளைக் கையாள்வதில் ஜெயகாந்தன் ஒரு முன்மாதிரி.

 படித்து ரசித்துப் பாருங்கள் - இப்படிப்பட்ட கதைகள் தமிழில் வருவது அரிது.

புதுக் கவிதையில் ராமாயணம் - 2

ராமனின் தீரத்தைக் கேட்ட வால்மீகி
நதித் தீரத்திற்க்குச் சென்றான்!
வல்வில் ராமனின் கதையைக் கேட்ட வால்மீகி
அன்றில் பறவைகளைக் கண்டான்!
அவை - ஆண் ஒன்று!
பெண் ஒன்று!
அது மட்டுமா?
அவற்றின் இதயமும் ஒன்று!
மணமாகா வால்மீகி
மனமொத்த தம்பதியரை
மனமார பார்த்து மகிழ்ந்தான்!
அம்பு ஒன்று பறந்து வந்தது!
ஆணின் உயிர் பறந்து சென்றது!
ஆண் பறவை துடித்து இறந்தது!
பெண் பறவை இருந்து துடித்தது!
கண்களின்றி செவிகளின்றி
கை கால்கள் எதுவுமின்றி
வாழ்ந்திடலாம் இவ்வுலகில்! - ஆனால்
வாழ்க்கையே இல்லையென்றால்
வாழ்வதெப்படி?
மனத்தை அடக்கிய வால்மீகி
சினந்தான் - கண்களைச்
சிவந்தான் !
துடித்திட்டான்! - சாபம்
விடுத்திட்டான்!
"வேடனே! மூடனே!
படுபாதகம் செய்திட்ட படுபாவியே!
அலை கடலைப் போல் ஓயாமல்
அலைவாய் இவ்வுலகில்!
நிலையான இடமின்றி
மலையான் துன்பத்துடன்
அலைந்திடுவாய் அற்பப் பதரே!"
சாபமிட்ட வால்மீகி
சாந்தமடைந்த் பின் சிந்தித்தான்!
சாபமே சுலோகம் போல்
இருந்ததால் வியந்திட்டான்!
மும்மூர்த்திகளில் ஒருவனாம்
நான்முகாங்களைக் கொண்டவன் -
நம்மையெல்லாம் படைத்தவன்
தோன்றினான் திடீரென்று!
சிந்தனை செய்த வால்மீகி
வந்தனம் செய்தான் பிரம்மனுக்கு!
ரகுராமன் அவதரித்த கதை
சுலோகமாய் வடித்துத் தர
ஆணையிட்டான் நான்முகன்!
நான்முகனின் ஆணையை
ஒருமுகமாய் ஏற்ற முனிவன்
ஞானக் கண்ணும் பெற்றிட்டான்!

Saturday, September 6, 2014

Haiku 1

கீரை உடலுக்கு நல்லது
கூவி கூவி விற்கிறாள்
உடல் நலிந்த கிழவி

The Best Seller by Arunabha Sengupta

“The Best Seller” by Arunabha Sengupta is one of the most interesting novels that I read in the recent times. This is the story of a writer who is struggling to become a successful author.

Sandeep - the protagonist is not just a struggling author. He is also a tai chi expert, an investigative journalist, a ghost blogger, and a voracious reader. He also knows karate, has great knowledge in world cinema and capable of talking about anything on the earth - science, history, mathematics, literature or Bhagavad Gita. He is basically a true multi-faceted person like the author of the novel.

The 681 pages of interesting novel are about the struggle of our protagonist writer to become a successful author and his interactions with the other colorful characters. There are interesting and unique characters such as the protagonist’s Dutch friend, the respectful professor in Kolkata, and psychiatrist. There are many other characters similar to those with whom we interact in the typical corporate scenario in the contemporary world.

I would like to specially mention about a particular character, who is equally interesting as Sandeep. That is Shruti – a lovely and pleasant character. The interactions between Sandeep and Shruti throughout the novel is poetic. I wouldn’t want to divulge the story in the name of a review. Let me just quote few lines from a chapter where Shruti and Sandeep interact. This is just to give you an idea about how interesting the interactions between these two characters throughout the novel.

Now the excerpt:
“Don’t you think births and rebirths will make the conversation too labored?”
“This is becoming too painful to bear.”
“I was not expecting that.”
“I guess there will be pregnant silence from now on till you deliver your story”

Many authors and poets of India have imagined and depicted Lord Krishna as a lover, son, king, guru, and even as a servant. However, I am not sure if anybody has depicted him as a modern-day consultant. No one would have thought that his ideas, which are believed to be 5000 years old, can be used by consultants for the modern day economic crisis. Interesting right? There are many such novel ideas and unique thought throughout the book.

The novel is purely contemporary, meaning, rather than merely having paragraphs and paragraphs of content, it’s written in a different way – it has sms messages, blog posts, twitter messages, and emails along with the typical content. In his previous book “Big Apple Two Bites” the author used a unique technique of referring the protagonist in the second person. In this novel, he uses all the contemporary techniques to represent the content of his novel. It’s really innovative and interesting.

The novel deals with various dimensions – how the writers struggle to publish their work, how the books are being reviewed by the people without reading the books, how the publishers reject the authors’ work without even going through the manuscript, the rat race in corporate world, how the people in the corporate world are ready to do anything for their own sake, love, infatuation, Gita, Upanishads, the thought process and behavior of typical consultant, tai chi training…….it’s endless man!

The humor and sarcasm throughout the book makes it more interesting to read this long novel. Overall, it’s a great work by Arunabha once again. I am looking forward for his next book.

சொல்லத்தான் நினைக்கிறேன்

மகேஷ் எப்படியும் இன்று அந்த விஷயத்தைப் பற்றி ஹேமாவிடம் சொல்லிவிட தீர்மானித்தான். ஆறு மாதங்களுக்கு முன் ஹேமா அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து அவளை மகேஷ் உன்னிப்பாகக் கவனித்து வருகிறான். அவளுடைய சாதுர்யமான பேச்சும், அதே சமயம் நாகரிகமாக அனைவரிடமும் அவள் நடந்து கொள்ளும் விதமும் அவனை மிகவும் கவர்ந்தன. காலப்போக்கில் அதுவே காதலாகவும் மாறி விட்டது. எப்படியும் தன் காதலைப் பற்றி ஹேமாவிடம் சொல்லிவிட மகேஷ் தீர்மானித்தான்.

ஆனால், அதற்கு முன்பாக ரமாவிடமும் இதைப் பற்றி பேச வேண்டும். என்னதான் இருந்தாலும், ரமாதானே மகேஷுடைய மனைவி. பின்னால் எந்தவிதப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே.

ரமாவுடன் மகேஷுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் அவர்களிடையே சுமூகமான உறவில்லை. ரமாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபமே மகேஷை ஹேமாவைக் காதலிக்கச் செய்தது.

முதலில், ரமாவுடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான் மகேஷ். அவளை விவாகரத்து செய்து விட்டால், ஹேமாவைத் திருமணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அன்றே, மகேஷ் ரமாவிடம் அதைப் பற்றி பேசிவிட நினைத்தான்.

"உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ரமா"

"அதுக்கு முன்னால நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்" - ரமா பேசினாள்.

"சொல்லு!" புரியாமல் மகேஷ் கேட்டான்.

"நான் உங்களை டிவோர்ஸ் செய்ய தீர்மானிச்சிருக்கேன்!"

புதுக் கவிதையில் ராமாயணம் - 1

மயங்காதவன் பிற பெண்களிடம்
தயங்காதவன் கொடும் பகைவரிடம்
கலங்காதவன் கடும் போர்க்களத்தில்
வருந்தாதவன் எந்நேரத்திலும்
சிலைகளுக்கில்லை அவன் போல் அழகு
கலைகளுமில்லை அவனுக்குத் தெரியாமல்
இப்படி உண்டோ மனிதன்
கேட்டானே வால்மீகி !
சொன்னானே நாரதன் !
நல்லவனும் அவனே
வல்லவனும் அவனே
மாயவனும் அவனே
தூயவனும் அவனே
கதிரவனுக்கு அவன் போல் வெளிச்சமில்லை
முழு நிலவுக்கு அவன் போல் வனப்புமில்லை
வில் வீரன் - நல்ல
சொல் வீரன்
வானத்தின் தேவர்களும்
வையகத்தின் மனிதர்களும்
கீழுள்ள நாகர்களும்
அவன் காலடியில்
அவனே ஸ்ரீ ராமன்